News July 29, 2024
முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினை வெளியீடு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான இலச்சினையை (Logo) வெளியிட்டார். இதில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 20, 2025
சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழா – 2025 செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கிவைக்கிறார். 200க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்த மாபெரும் கண்காட்சியில் அனைவரும் பங்கு பெறலாம். அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 20, 2025
சென்னை: தலைக்கேறிய மது போதை… காதலி மரணம்!

சென்னை மதுரவாயில் அடுத்த ஆலப்பாக்கத்தில் கணேஷ் ராம்(29) என்ற காதலனும் ராயப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ லட்சுமி(26) என்ற காதலியும் கணேஷ் ராம் அறையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். பின்பு ஸ்ரீ லட்சுமி கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 20, 2025
சென்னை: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.