News October 21, 2024

முதியோர் உதவித்தொகை பெற வந்த 110 வயது மூதாட்டி

image

நாகர்கோவிலை சேர்ந்த சரஸ்வதி என்ற 110 வயதுடைய மூதாட்டியை அவரது மகன் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்பதால், அவர் இறக்கும் முன்பாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக மூன்று சக்கர நாற்காலியில் அழைத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுமுறை என்பதால் திரும்பிச் சென்றார்.

Similar News

News August 14, 2025

குமரி: கணவரால் பிரச்சனையா.? உடனே CALL .!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04652-278404-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 14, 2025

ஆக.18ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட்.18ம் தேதி காலை 9 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை ஆட்சியரிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 14, 2025

குமரி: உங்க வாட்டாச்சியர் போன் நம்பர் தெரியுமா?

image

கன்னியாகுமரி மக்களே.. உங்களது வட்டாட்சியரை தொடர்புகொள்ள இந்த எண்களை மறக்காமல் SAVE பண்ணிக்கோங்க…
▶️வட்டாச்சியர், அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️வட்டாச்சியர், தோவாளை – 04652282224
▶️வட்டாச்சியர், கல்குளம் – 04651250724
▶️வட்டாச்சியர், விளவங்கோடு – 04651260232
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)அகஸ்தீஸ்வரம் – 04652233167
▶️தனி வட்டாச்சியர்,(சபாதி)தோவாளை – 04652282224
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!