News August 17, 2024

முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

image

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 1, 2025

காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு GOODNEWS!!

image

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக காஞ்சிபுரம் போன்ற தொகுதியில் சிப்காட் பூங்காக்கள் தொடங்க உள்ளது. இதற்கு சிப்காட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதன்படி, 422.33 ஏக்கர் மதிப்பில் ரூ.530 கோடி மதிப்பில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்கா வாயிலாக, 10,000 வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் ரூ.2,000 கோடி முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

News November 1, 2025

காஞ்சிபுரம்: வாக்காளர்கள் திருத்த முகாம்

image

காஞ்சிபுரத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய 4 தொகுதிகளில், 1,401 ஓட்டுச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் திருத்த முகாம், நவ.4 முதல் டிச.4 வரை நடைபெற உள்ளது. அதன்படி, 2002க்கு பின் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளவர்கள் கண்டிப்பாக திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின் பணிகள் முடிந்து, பிப்ரவரி 7ல், வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

News November 1, 2025

காஞ்சிபுரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!