News August 11, 2024
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை மூடாவிட்டால் முதல்வர், அவரது மகன் மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆகியோரை சுட்டு கொல்வேன் என விக்ரமன் என்பவர் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தது. இதை விசாரித்த காவல்துறையினர், முன்விரோதம் காரணமாக விக்ரமன் பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய தஞ்சாவூரை சேர்ந்த கோட்டீஸ்வரன் என்பவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கொண்டு வந்துள்ளனர்.
Similar News
News October 17, 2025
கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் (04175-236494)புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.’
News October 17, 2025
கள்ளக்குறிச்சி: நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி, சின்னக்குப்பத்தை சேர்ந்த சுதா நேற்று தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்கு, சின்னக்குப்பம் பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற சுந்தரராஜன் என்பவரது கார் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் சுந்தரராஜன் மீது திருநாவலூர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News October 17, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

கள்ளக்குறிச்சி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)