News March 21, 2024
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தென்காசி திமுக வேட்பாளர்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 20ம் தேதி மாலையில் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் உடன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்
Similar News
News September 10, 2025
தென்காசி: நகைக்காக பெண் கொலை; அதிரடி தீர்ப்பு

புளியங்குடி அருகே கடந்த 2013ஆம் ஆண்டு நகைக்காக இளம் பெண்ணை வெட்டி கொலை செய்து சாக்கு முட்டையில் வைத்து வீசி சென்ற சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்ட ராஜா என்பருக்கு தென்காசி மாவட்ட உரிமை நீதிமன்ற நீதிபதி ராஜவேலு ஆயுள் தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் அரசு வழக்கறிஞர் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகினார்.
News September 10, 2025
தென்காசி: மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மாலை முதல் பெய்தது. இதன் காரணமாக தென்காசி வட்டார சுற்று பகுதிகளில் மழை பெய்த நிலையில் (செப்டம்பர் 9) நேற்று சங்கரன்கோவில் – குருவிகுளம் செல்லும் சாலையில் மின்னல் தாக்கி லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 10, 2025
தீபாவளி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008இன் கீழ் தற்காலிகமாகப் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 10.10.2025 வரை (https//www.tnesevai.tn.gov.in) இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.