News November 27, 2025
முதலிரவுக்கு மறுத்த மனைவி.. அடுத்து நடந்த விபரீதம்

சென்னையில் முதலிரவில் சண்டை ஏற்பட்டதால் மனைவியை சுத்தியலால் கணவன் தாக்கிய கொடுமை அரங்கேறியுள்ளது. அகஸ்டின் ஜோஷ்வா(33) என்பவர், திருத்தணியைச் சேர்ந்த பெண்ணை கரம்பிடித்துள்ளார். முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் தாம்பத்யத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட சண்டையில் மனைவியை சுத்தியலால் ஜோஷ்வா தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கணவனை போலீஸ் கைது செய்துள்ளது.
Similar News
News November 28, 2025
வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. ஸ்டாலின் அறிவிப்பு

டிட்வா புயலையொட்டி, முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய அவர், பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 SDRF மற்றும் 12 NDRF படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
இந்த முக்கிய மாற்றங்கள் டிசம்பரில் அமலுக்கு வருகிறதா?

➤டிச.1 முதல் உங்கள் ஆதாரில் பெயர், போன் நம்பர் நீக்கப்பட்டு, வெறும் போட்டோ, QR Code மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது ➤அனைத்து விதமான AutoPay வசதியும் ஒரே UPI APP-ன் கீழ் கொண்டுவரப்படும். சில பரிவர்த்தனைகளுக்கு biometric கட்டாயமாக்கப்படலாம் ➤SBI வங்கியின் mCash சேவை டிசம்பர் 1 முதல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது ➤டிச.1 அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 28, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் அன்புமணி

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என அன்புமணி ஊர்ஜிதமாக கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் தேர்தலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசு செய்யும் தவறுகளையும் பாமக சுட்டிக்காட்டுவதாக அவர் பேசியுள்ளார்.


