News September 2, 2025
முதலமைச்சர் கோப்பைகாண நாளைய விளையாட்டுப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (03-09-25) முதலமைச்சர் கோப்பைகாண திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பொதுப்பிரிவு வாலிபால், சிலம்பம், கால் பந்து, தடகளம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் காலை 10 மணி அளவில் துவங்கப்படும் இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.மேலும் இந்த போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
Similar News
News September 2, 2025
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., ஆகியோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்வில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
News September 2, 2025
மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கிய கலெக்டர்

திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, உடனடியாக மனுக்கு தீர்வு காணப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு கலெக்டர் மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
News September 2, 2025
தி.மலை மக்களே இந்த நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

▶️மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04175- 232260
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️பேரிடர் கால உதவி – 1077 / 04175 – 232260
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️முதியோர் உதவி எண் – 1800-180-1253 SHARE பண்ணுங்க..!