News March 14, 2025
முதலமைச்சர் குறித்து அவதூறு: பதிவிட்ட நபர் கைது

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கலியுக கண்ணன் (50). இவர் அதே பகுதியில் டுடோரியல் சென்டர் நடத்திவருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் வந்ததை எடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Similar News
News March 14, 2025
சேலத்தில் புதிய நூலகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

“போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சேலம், கடலூர், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களுடன் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் வசதிகளுடன் புதிய நூலகம் அமைக்கப்பட வேண்டுமென சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், பேரவையில் கோரிக்கை வைத்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News March 14, 2025
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களை ஒட்டி வரும் 17ஆம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் வசதிக்காக போக்குவரத்து கழகம் இணைய வழியாகவும் முன்பதிவு செய்து பயன் பெற போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
News March 14, 2025
சேலத்திற்கு பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. அதன்படி ▶ சேலம்- தெலுங்கலூர் பகுதியில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்படவுள்ளது. ▶ சேலத்தில் முதல்வர் படைப்பகம்.