News November 6, 2025
முட்டை விலை ரூ. 5.50- ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
Similar News
News February 12, 2026
நாமக்கல் இளைஞர்களே பிப்.14 அரிய வாய்ப்பு!

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் பிப்ரவரி 14 (சனிக்கிழமை) அன்று ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 5,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை தேடுவோருக்கு இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News February 12, 2026
சேந்தமங்கலம் அருகே சோகம்: பள்ளி மாணவி பலி!

சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் 6-ம் வகுப்பு மாணவி லிதியா, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு GH யில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தம்பி ஏற்கனவே காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 12, 2026
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.


