News April 15, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (14-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
Similar News
News August 11, 2025
நாமக்கல்: 8வது போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT!
News August 11, 2025
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
News August 11, 2025
நாமக்கல் வரும் வெளியூர் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கல் ரயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பணிகள் மற்றும் வியாபார விஷயமாக வருபவர்கள் தங்கி செல்ல ஏதுவாக புதிதாக ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது . ஓய்வு அறை அமைக்கப்பட்ட பின் வெளியூர் பயணிகள் குறைந்த கட்டணத்தில் ரயில்வே நிலையத்திலேயே தங்கி ஓய்வெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.