News April 5, 2024
முட்டி போட்டு முதல்வரானவர் இபிஎஸ்

முட்டிப் போட்டு இபிஎஸ் முதல்வரானதாக அமமுக நிர்வாகி சிஆர் சரஸ்வதி விமர்சனம் செய்துள்ளார். மதுரை சோழவந்தானில் டிடிவி தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், இபிஎஸ்சை முதல்வராக்கும்படி டிடிவி தினகரனே பரிந்துரை செய்தார் என்றும், அதையேற்று சசிகலா அவரை முதல்வராக்கினார் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் 2 பேருக்கும் இபிஎஸ் துரோகம் செய்துவிட்டார் என்றும் சிஆர் சரஸ்வதி குற்றம்சாட்டினார்.
Similar News
News February 8, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1 முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதத்திற்கு தேவையான சத்துமாவினை கணக்கிட்டு விடுமுறைக்கு முன்பாகவே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு ரெடியாகிக்கோங்க வாண்டு பசங்களே!
News February 8, 2026
40 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயம் செய்யணும்!

40 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!
News February 8, 2026
நாளை இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், மதுக் கடைகள் நாளை 3 மணி நேரத்துக்கு இயங்காது என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பகல் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


