News November 27, 2024

முட்டம் கடற்கரைக்கு ஆண்டுக்கு 30,000 பேர் வருகை: கலெக்டர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக முட்டம் கடற்கரை விளங்கி வருகிறது. மாவட்டத்தில் இது 5வது முக்கிய சுற்றுலா மையமாகும். அலைகள் பாறைகளில் அடித்து சிதறும் காட்சி இங்கு ரசிக்கும்படி அமைந்துள்ளது. தினமும் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், ஆண்டுக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவதாக குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(நவ.,26) தெரிவித்துள்ளார்.

Similar News

News August 23, 2025

மாணவி பாலியல் வன்முறை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

image

அருமநல்லூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (56) கூலி வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை பல முறை பாலியல் வன்முறை செய்துள்ளார். இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா நேற்று சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

News August 22, 2025

குமரி: வீட்டிலிருந்தே பட்டா பெறலாம்

image

கன்னியாகுமரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை இனி எளிமையாக பெறலாம். அதற்கு eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

குமரியில் கொலை; பகீர் வாக்கு மூலம்

image

மேக்கா மண்டபம் சந்தையில் மணி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் மேசாக் என்பவரைகைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் மணி வைத்திருந்த மது பாட்டில்களை காணவில்லை அவர் என்னை சந்தேகப்பட்டு எழுப்பி கேட்டார். இதில் ஏற்பட்ட தகறாலில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!