News August 20, 2025

முடிச்சூரில் வெள்ள முன்னெச்சரிக்கை பணி ஆய்வு

image

முடிச்சூரில் வெள்ள முன்னெச்சரிக்கை பார்வையிட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் டிஆர்ஓ வீடியோ தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மற்றும் முடிச்சூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விநாயகம் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு வருகின்ற மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பார்வையிட்டனர்.

Similar News

News January 30, 2026

செங்கை: உங்கள் What’s app பாதுகாப்பா இருக்கா? Click Now!

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

News January 30, 2026

செங்கல்பட்டு மாணவர்கள் சாதனை

image

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய ஏர்கன் துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று சாதனை படைத்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஏர்கன் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் பி.கிருஷ்ணகுமார் தலைமையில் கலந்து கொண்ட வீரர்களில் 12 பேர் தங்கமும், 4 பேர் வெள்ளியும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

News January 30, 2026

செங்கை: காதல் வலையில் வீழ்த்திச் சீரழிப்பு

image

திண்டிவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (20), கேரள மாநில மாணவியைக் காதலித்து நன்மங்கலத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆகாஷ் தன்னைத் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் மாணவி புகார் அளித்தார். தலைமறைவாக இருந்த ஆகாஷைக் கன்னியாகுமரியில் வைத்துப் பிடித்த தாம்பரம் மகளிர் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!