News August 5, 2025
முகாமினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம் உதகை நகாராட்சிக்குட்பட்ட ஒக்கலிகர் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஊட்டி நகராட்சி மன்ற தலைவர் வாணிஸ்வரி உடன் இருந்தார். திரளான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
Similar News
News August 6, 2025
நீலகிரி: 21% அதிகரித்த வரையாடு எண்ணிக்கை

தமிழ்நாட்டின் மாநில விலங்கு நீலகிரி வரையாடு ஆகும். கடந்த சில வருடங்களாக இதன் எண்ணிக்கை அருகி வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அரசாங்கத்தின் முயற்சியால் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 21% அதிகரித்துள்ளது. 14 வனக்கோட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 1303 வரையாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 6, 2025
வீட்டை உடைத்த கரடி: அச்சத்துடன் பொதுமக்கள்

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சிக்கு அருகாமையில் உள்ள இந்திராநகர் பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து வீட்டை சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு பின்பு ஊர் பொது மக்களிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தி கரடியை கூண்டு வைத்து பிடித்து தருவதாக தெரிவித்துள்ளார்கள்.
News August 6, 2025
நீலகிரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நீலகிரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.