News October 16, 2024

மீன் பண்ணை அமைப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு

image

நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்.24ஆம் தேதி ஒருங்கிணைந்த மீன் பண்ணை அமைப்பது குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் விவசாயிகள், கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மீன் பண்ணை அமைக்க விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் இன்று நவம்பர்-13ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.85 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தது. இதனிடையே நேற்று 12ம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.80 ஆக இருந்தது.

News November 13, 2025

நாமக்கல் விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல்லில் சிறப்பு பருவ பயிர்களான நெல்-II (ம) சிறிய வெங்காயம்-II சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, பொது சேவை மையங்களிலோ பிரீமியத் தொகையாக, நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.567.61-ம், சிறிய வெங்காயத்திற்கு ரூ.2087.16-ம் செலுத்தி காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்ய கடைசி தேதி: நெற்பயிருக்கு டிச.16 (ம) சிறிய வெங்காயம் பயிருக்கு டிச.01 ஆகும்

News November 13, 2025

மோகனூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

மோகனூர் காவல் சரகத்திற்குட்பட்ட ஆரியூர் ஊராட்சி நடுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி. இவருடைய மணிகண்டன் (27), கூலித்தொழலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் மோகனூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

error: Content is protected !!