News July 23, 2024
மீன்வலையில் சிக்கிய 6 டன் எடையில் திருக்கை மீன்கள்

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மீனவர்கள் நேற்று(ஜூலை 22) விசைப்படகில் சென்று கடலில் வலை வீசியபோது ராட்சத திருக்கை மீன்கள் சிக்கியது. இரவில் மீன்களை அவர்கள் படகில் இருந்து ராட்சத கிரேன் மூலம் கரையில் இறக்கினர். பிடிபட்ட 6 டன் கொண்ட10 திருக்கை மீன்கள் ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது. பின்னர் அந்த திருக்கை மீன்களை வியாபாரிகள் கிரேன் மூலம் லாரியில் தூக்கி வைத்து கொண்டு சென்றனர்.
Similar News
News November 9, 2025
குமரி: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் நேசமணி(62). 2020-ம் ஆண்டு இவர் அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சுந்தரய்யா, நேசமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News November 9, 2025
குமரி: விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் உயிரிழப்பு

திற்பரப்பு பழைய பாலம் சாலையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). கூலித் தொழிலாளியான இவர் நவ.5-ம் தேதி வீட்டு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது மோதியுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட செல்வராஜ் சிகிட்சை பலனளிக்காமல் இன்று (நவ.8) உயிரிழந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
குமரி: இளம் பெண் தற்கொலை

கீழமறவன் குடியிருப்பு டெம்போ டிரைவர் செல்வசரண் மற்றும் ரேஷ்மா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். கடந்த நவ.6ம்தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ரேஷ்மா ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்கு செல்போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுக்குறித்து கோட்டார் போலீசார் விசாரணை.


