News April 13, 2025
மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலாகிறது. ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்க காலம் கடைபிடிக்கப்படும். மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.
Similar News
News April 15, 2025
கோடை காலத்தில் குடிக்க வேண்டிய பானங்கள்

குமரி மக்களே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த பானங்களை மட்டும் அருந்துங்கள். இளநீர், மோர், பானகம், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொண்டால் உடல் நீர்ச்சத்தோடு ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாமல் உடலுக்கு கேடு விளைவிக்கும் குளிர் பானங்களை அருந்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.
News April 15, 2025
தபால் நிலையங்களில் ஒன்றரை லட்சம் சேமிப்பு கணக்கு தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 771 சேமிப்பு கணக்குகள் தபால் நிலையங்கள் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி திட்டம் உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களில் 8394 சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
News April 15, 2025
தண்டவாளத்தில் உடற்பயிற்சி இரும்பு மனிதன் கைது

நாகர்கோவில் அருகே தாமரைக் குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் இரும்பு மனிதன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தனது நண்பருடன் உடற்பயிற்சி மேற்கொண்ட சமூக வலைதளங்களில் இது பரவியது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் இன்று (ஏப்.15) கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.