News June 28, 2024
மீனாட்சி அம்மன் கோவிலில் முளைக்கொட்டுத் திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா வரும் 05.08.2024 முதல் 14.08.2024 வரை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மீனாட்சியம்மன் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும். 7 ஆம் நாளான 11.08.2024 அன்று வீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்ததியில் அம்மன் மற்றும் சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News September 6, 2025
மதுரையில் நாளை கோவில்களில் நடையடைப்பு

நாளை (செப்.,7) சந்திரகிரகணம் இரவு 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு நாளை காலை 11:41 மணிக்கு நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. செப்.8 முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
News September 6, 2025
மதுரை: சந்திர கிரகணம் நிகழ்வை பார்க்கலாம்

சந்திர கிரகணம் நாளை இரவு 9:58 மணிக்கு துவங்கி நாளை மறுநாள் அதிகாலை 1 மணி அளவில் விலகுகிறது. சந்திரன் மறைப்பு 11 மணி அளவில் துவங்கி அதிகபட்சமாக 11:41 மணிக்கு முழுமையாகி 12:22 வரை நிலைத்து நிற்கும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக விலகி அதிகாலை 1:26 மணிக்கு முழுமை அடையும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலே பார்த்து மகிழலாம் என மதுரை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
மதுரையில் வக்கீலை தாக்கிய 3 பேர் கைது

வண்டியூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பகலவன்(40). இவர் நேற்று முன்தினம் காலை நடைபெற்று சென்ற போது சங்கு நகரில் திருமண மண்டபம் எதிரில் 3 பேர் கொண்ட கும்பல் கம்பு, கற்களால் அவரை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து அவரது மனைவியை ஷியாமளா அளித்த புகாரில் ராம்குமார் (28), அருண்பாண்டி(33), மணிமாறன்(37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.