News April 9, 2025
மீனவர் வலையில் சிக்கய அரிய வகை ஆமை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உப்புத் தண்ணீர் தீவு அருகே நேற்று முன்தினம் விரிக்கப்பட்ட வலையில் 100 கிலோ ‘ஆலிவர் ட்ரீ’ என்ற இனத்தை சார்ந்த பெண் ஆமை சிக்கியது. பைபர் நாட்டுப்படகில் சென்ற ஒப்பிலான் ஒத்தப்பனையைச் சேர்ந்த மீனவர் சுகன் ரவி (35), இதைப் பார்த்தார். ஆமையின் துடுப்பு பகுதியில் சுற்றிக்கொண்ட வலையை நுணுக்கமாகப் பிரித்து ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டார்.மீனவரை வனச்சரகர் பாராட்டினார்.
Similar News
News April 17, 2025
விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு

ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து,ஹாக்கி கையுந்து பந்து, டென்னிஸ், இறகுப் பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படும்.முகாமில் கலந்து கொள்பவர்கள் மைதானத்திற்கு நேரில் வரலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
News April 17, 2025
இராமேஸ்வரம் கோவிலில் தரிசன கட்டணம் ரத்து

இராமேஸ்வரம், திருச்செந்தூர், திருவரங்கம் உள்ளிட்ட பத்து திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் சமயபுரம், இராமேஸ்வரம், திருவரங்கம், வேளச்சேரி உள்ளிட்ட 4 கோவில்களில் அர்ச்சகர் (ம) பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டி தரப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
News April 17, 2025
ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை, இராமநாதபுரம் மாவட்ட ஊர் காவல்படை பிரிவில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த 30 ஊர் காவல்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ,IPS., இன்று (17-04-25) காலை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊர் காவல்படை காவலர்கள் மகிழ்ச்சியுடன் சான்றிதழை பெற்றனர்.