News April 8, 2024
மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள இரண்டு காரைக்கால் விசைப்படகு ஓட்டுனர்கள் (ம) தங்களின் விசைப்படகை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 4ஆம் தேதி முதல் அறிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இன்றுடன் 5ஆம் நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Similar News
News February 15, 2026
புதுச்சேரி: அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பரபரப்பு

காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது, பாதுகாப்பு வலயத்திற்குள் ஒரு ட்ரோன் அத்துமீறி பறந்தது. ஏற்கனவே அந்த பகுதி ‘நோ-ஃப்ளை ஜோன்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், NSG கமாண்டோக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ட்ரோன்-கன் மூலம் அதை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
News February 15, 2026
புதுச்சேரி: மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியருமான குலோத்துங்கன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ருதி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
News February 15, 2026
புதுச்சேரி: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


