News February 15, 2025

மீனவர்கள் துறைமுகத்தில் கருப்பு கொடி அணிந்து ஆர்ப்பாட்டம்

image

காரைக்கால் நாகை மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை அரசை கண்டித்தும், அங்குள்ள மீனவர்கள் மற்றும் படகை விடுவிக்க கோரியும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று 15-2-25 ஐந்தாவது நாள் போராட்டமாக, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மற்றும் தங்கள் சட்டைகளில் கருப்பு கொடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News March 6, 2026

புதுச்சேரி: தாலி செயின் பறிப்பு-2 பெண்கள் கைது!

image

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில், விழுப்புரம் முத்தம்பாளையத்தைச் சேர்ந்த சித்ரா என்பவரிடம் இருந்து, 6.770 சவரன் தங்க தாலி செயினை பறித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த நித்யா, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த அபிநயா ஆகியோரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 6, 2026

புதுச்சேரி: போக்சோ விரைவு நீதிமன்றம் அதிரடி!

image

புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சீனுவாசன் (55) என்பவருக்கு போக்சோ விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 6, 2026

புதுச்சேரி: சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

திருநள்ளாறில் இன்று நடைபெறும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விழுப்புரம், திருநள்ளாறு, நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்படும் ரயில் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும் என்றும் மதியம் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

error: Content is protected !!