News January 28, 2025
மீனவர்கள் கைது: இபிஎஸ் வலியுறுத்தல்

“வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 10, 2025
சேலம்: ரூ 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35 வயதுகுட்பட்ட மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு இவர்களுக்கு ஜெர்மனியில் பணிபுரிய ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம் பெற வாய்ப்புள்ளது. அதற்காக ஜெர்மன் மொழி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது தகுதிவாய்ந்தவர்கள இணையதளத்தில் www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெற சேலம் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
News September 10, 2025
சேலம்: வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் படிப்பு முடித்தவர்களுக்கான வாய்ப்பு உழவர் நலம் மையம் அமைக்க ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register இணையதளத்தில் விபரங்களை அறிந்து கொண்டு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.
News September 10, 2025
சேலத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதிய ரேஷன் கார்டு வேண்டுமா? அல்லது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம்,தொலைபேசி எண் போன்றவை ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? உங்களுக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 13.09.2025 அன்று குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் இரா. பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.SHAREit