News March 24, 2025

மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

image

ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் மார்ச்.22 அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்களையும் அவர்கள் விசாரித்து ராமேஸ்வரம் திரும்பிச் செல்லும் படி எச்சரித்து அனுப்பினர். அதன் பின் அவர்கள் இந்திய எல்லைகுள் மீன்களை பிடித்து நேற்று கரை திரும்பினர். இது குறித்து மீனவர்கள் மீன்வளத்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை.

Similar News

News August 24, 2025

ராம்நாடு: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இந்த லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து 19.09.2025க்குள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News August 24, 2025

ராமநாதபுரம்: நம்ம ஊரின் சுவாரசிய தகவல்கள் இதோ…

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1910
▶️ மக்கள் தொகை: 15.14 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 4
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 11,97,228
▶️ சுற்றுலாத் தலங்கள் – ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, மன்னார் வளைகுடா பூங்கா, பாம்பன் பாலம்.
▶️ தமிழ்நாட்டில் அதிக அளவில் தீவுகள் உள்ள மாவட்டம்.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News August 24, 2025

விடைபெற தயாராகும் பாம்பன் பாலம்

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் விடைபெற தயாராகியது.

error: Content is protected !!