News June 27, 2024

மீனவர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை

image

தூத்துக்குடி கடற் பகுதியில் கடந்த 2 நாட்களில் இரண்டு ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனை கைப்பற்றிய வனத்துறையினர் ஆமைகள் எவ்வாறு இறந்தன என ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆமைகளை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மீனவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

தூத்துக்குடி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News March 3, 2026

தூத்துக்குடி: ஆட்டோ கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே பலி

image

ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செந்தில்குமார் (54) ஆட்டோவில் சவாரியாக நாசரேத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல புதுக்குடி அருகே சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 3, 2026

தூத்துக்குடி: 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

image

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டி (21) மற்றும் தருவைகுளம் பகுதியில் நடந்த கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய கட்ட முருகன் (31) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை தடுப்பு காவல் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!