News October 27, 2024

மீனவர்களின் 10வது நாள் வேலை நிறுத்த போராட்டம்

image

மண்டபம் பகுதியைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அக்.14ம் தேதி கைது செய்து வவுனியா & யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் நவ.9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்தது, 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 10வது நாளை எட்டியது.

Similar News

News January 28, 2026

ராம்நாடு : EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

ராமநாதபுரம் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

image

ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் தங்குமிடம் மோசமாக இருந்ததை கண்ட நீதிபதிகள் மெஹபூப் அலிகான் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். நம் உறவினர்களை இங்கு தங்க வைப்போமா? இவர்களும் மனிதர்கள்தானே எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அடுத்த 10 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என நகராட்சி சுகாதார அலுவலருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

News January 28, 2026

ராமநாதபுரம் மக்கள் கடும் அவதி…!

image

வங்கி ஊழியர்களின் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 27 வங்கிகளில் மொத்தம் 51 பெண்கள் உள்பட 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின. குடியரசு தின விடுமுறையை தொடர்ந்து இந்த போராட்டம் நடந்ததால், 4 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதுடன், 90% ஏ.டி.எம்-கள் பணமின்றி முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

error: Content is protected !!