News October 27, 2024

மீனவர்களின் 10வது நாள் வேலை நிறுத்த போராட்டம்

image

மண்டபம் பகுதியைச் சேர்ந்த 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அக்.14ம் தேதி கைது செய்து வவுனியா & யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் நவ.9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்தது, 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் 10வது நாளை எட்டியது.

Similar News

News August 24, 2025

BREAKING இராமநாதபுரம் சாலை விபத்தில் இருவர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம் களக்குடி அருகே இன்று (ஆகஸ்ட்.24) புதுக்கோட்டையில் இருந்து வந்த கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நான்கு பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News August 24, 2025

BREAKING: பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர்

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள தூக்கு பாலம் 110 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலம் பல்வேறு புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும், பொறியியல் திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது பாம்பன் பாலம் 4 மாதங்களில் விடைபெற தயாராகியது.

News August 24, 2025

ராம்நாடு: இலவச வக்கீல் சேவை! SAVE பண்ணிக்கோங்க

image

ராம்நாடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாக சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️ராமநாதபுரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!