News March 17, 2025
மீண்டும் மன்னராட்சியா..? – ஈபிஎஸ் காட்டம்

திமுக ஆட்சி ஏழை மக்களை ஏமாற்றுகிறது எனவும் இந்த ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது எனவும் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது என்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 17, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்ட ஊரக பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் காவல்துறையினர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று மார்ச் 17 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்.
News March 17, 2025
சேலம்: கைதான பாஜகவினர் விடுதலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். தற்போது அண்ணாமலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் சேலத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவினர் அனைவரையும் போலீசார் விடுவிட்டனர்.
News March 17, 2025
சேலம் : ஆன்லைனில் வாங்குவோர் கவனத்திற்கு

சேலம் : மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதுபடி இன்று(மார்ச் 17) அதிக தள்ளுபடி போன்ற விளம்பரங்களை நம்பி அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் விற்பனை தளங்களில், உங்களது வங்கி சார்ந்த தகவல்களை சேமித்து வைக்கவோ அவற்றை நம்பி உங்கள் பணத்தை இழந்து விடவோ வேண்டாம். என்கிற போஸ்டை காவல்துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.