News September 3, 2025
மிலாடி நபி முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (செப்.5) மிலாடி நபி விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார். மீறி கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
விழுப்புரம் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற 2026 பொது தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (05.03.2026) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் .அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.
News March 5, 2026
மேம்பாலம் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

மரக்காணம் ஒன்றியம் அன்னப்புத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் அன்னப்புத்தூர் – ஓமந்தூர் செல்லும் சாலையில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இன்று (மார்ச்.05) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


