News August 17, 2024
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (56).விவசாயம் செய்து வந்த இவர், நேற்று காலை வழக்கம்போல் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்றார். அப்போது, சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், காட்டுப்பன்றி வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News February 28, 2026
விழுப்புரம்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<
News February 28, 2026
செஞ்சியில் திமுக சார்பில் போட்டியிட மு.அமைச்சரிடம் விருப்பமனு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில், நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட, மேல்மலையனூர் ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் இன்று(பிப்.27) செஞ்சி திமுக அலுவலகத்தில், மு.அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் விருப்ப மனு அளித்தார். உடன் செஞ்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News February 28, 2026
விழுப்புரத்தில் காவல்துறை அதிரடி !

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியில் ஆரோவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நின்றிருந்த அய்யப்பன் (21), ரஞ்சித்குமார் (23) ஆகியோரைச் சோதனையிட்டதில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 25 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.


