News February 17, 2025
மின் இணைப்புக்கு ரூ.30,000 லஞ்சம் – உதவி பொறியாளர் கைது

அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரனிடம் மின் இணைப்பு வழங்க, ரூ.35,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, ரூ.5,000 ஐ வழங்கிய ராஜேந்திரன், மீதமுள்ள பணத்தை வழங்காமல் அவர், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அளித்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய, ரூ.30,000 ஐ உதவி பொறியாளர் சிவகுரு, வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது, மறைவில் இருந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News April 21, 2025
கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேர் கைது

ஓசூர் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் அடவிசாமிபுரம், நல்லூர் கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்த காமையூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 32), கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த கணேசன் (70) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
News April 20, 2025
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பாகலூரை அடுத்து மாலூர் செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை எடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் இன் உதவியுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 வயது சிறுவனுக்கு எந்த காயமும் இன்றி உயிர்பிழைத்தார்.
News April 20, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! அஞ்செட்டி-9789271329, தேன்கனிக்கோட்டை-9445000542, ஓசூர்-9445000541, சூளகிரி-9080745484, போச்சம்பள்ளி-9445000540, ஊத்தங்கரை-9445000539, பர்கூர்-7825873359, கிருஷ்ணகிரி-9445000538. *மிக முக்கிய எண்களான இவற்றை உடனே சேவ் பண்ணிக்கோங்க. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்*