News December 11, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் சீல் வைத்து பாதுகாக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறனர். வாக்கு இயந்திரங்களின் செயல்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆராய்ந்தனர். கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
மிரட்டும் மழை.. 15 மாவட்டங்களுக்கு அலர்ட்

தமிழகத்தின் 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, செங்கை, காஞ்சி, விழுப்புரம், அரியலூர், சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமுடன் இருங்கள். உங்கள் பகுதியில் மழையா?
News December 16, 2025
ரெட் கலர் கிறிஸ்துமஸ் தாத்தா எப்படி வந்தார் தெரியுமா?

சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஏன் சிவப்பு நிற ஆடையில் இருக்கிறார் தெரியுமா? சாண்டா கிளாஸ், பச்சை, பிரவுன் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் இருந்த நிலையில், 1931-ம் ஆண்டு கோக கோலா, விளம்பரத்திற்காக சாண்டா கிளாஸுக்கு ‘ரெட்’ கலரில் தனித்துவமான தோற்றத்தை உருவாக்கியது. இதன்மூலம், அவர் உலகம் முழுவதும் புது அடையாளத்தை பெற்றார். அந்த சாண்டா கிளாஸை தான் இன்று நாம் பார்க்கிறோம்.
News December 16, 2025
ஆஸி., படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் இந்தியரா?

ஆஸி.,யில் யூதர்களை குறிவைத்து <<18568504>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்திய சஜித் அக்ரம், ஐதராபாத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 1998-ல் ஆஸி.,க்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஐரோப்பிய பெண்ணை மணமுடித்துள்ளார். மேலும், இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் சென்று, அங்கு ஆயுத பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


