News March 16, 2025
மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு

அரகண்டநல்லூர், கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்,15 பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று(மார்ச் 15) இரவு வெங்கடேசன் தனது வீட்டில் ஜங்ஷன் பாக்சை பிரித்து ரிப்பேர் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே வெங்கடேசனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News March 16, 2025
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
News March 16, 2025
நெஞ்சு வலியால் ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 16, 2025
தூய்மை பணியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க மா.செ

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி நகர இளைஞரணி சேர்ந்த மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு மதிய உணவு வழங்கிய தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் பிரகாஷ் இந்த தமிழக வெற்றி கழகத்தைச் கவரை தெரு வார்டு எண் 18 தமிழக வெற்றி கழக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.