News March 14, 2025

மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலி

image

தர்மபுரி, மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் மாதையன் (45). இவர், பாரூர் அருகே உள்ள மொழிவயனுார் முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 12 தேதி காலை கோவிலில் பூஜை செய்ய சென்றுள்ளார். அப்போது கோவிலின் பின்புறமாக இருந்த, இரும்பு ஷீட்டை அவர் தொட்டபோது அதில் கசிந்த மின்சாரம் தாக்கியதில், மாதையன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

Similar News

News March 14, 2025

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க்

image

ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். ஓசூர் பெங்களூருக்கு அருகாமையில் இருப்பதால், சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. TIDEL உயர் தொழில்நுட்ப பூங்கா, மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும்.

News March 14, 2025

இரட்டை முதியவர்கள் கொலை வழக்கு: 5 தனிப்படை அமைப்பு

image

ஒன்னல்வாடியைச் சேர்ந்தவர் லூர்துசாமி, இவரது மனைவியின் சகோதரி எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருக்கும்பொழுது ,வீடு தீ பற்றி எறிந்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டினுள் பார்க்கும் பொழுது இருவரும் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

News March 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேலே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!