News December 8, 2024
மின்சாரம் தாக்கி கூலி விவசாயி பலி

பட்டுக்கோட்டை அருகே உள்ள மடத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (55). கூலி தொழிலாளியான வீரையன் இன்று காலை தனது வீட்டின் பின்புறம் கொல்லை பகுதிக்குச் சென்றபோது அங்கு உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் மின்கம்பியை அவர் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வீரையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 3, 2026
தஞ்சை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
தஞ்சாவூர்: தவெக கூட்டத்திற்கு அனுமதி

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் நாளை (மார்ச் 4) தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக போலீசாரிடம் கட்சியினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறும் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
தஞ்சை: பாலியல் வழக்கில் தலைமறைவானவர் கைது!

பாப்பாநாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றம் சுமத்தப்பட்ட கவிதாசன் என்பவர் ஜாமீன் பெற்று தலைமறைவானார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த கவிதாசனை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


