News April 7, 2025
மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட மூவர் பலி

மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கம்பி வேலி மீது கை வைத்ததில் இளஞ்சியத்தை மின்சாரம் தாக்கியது. அடுத்தடுத்து ஐவி மற்றும் சுஜீத் மீது மின்சாரம் தாக்கியது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்குக் அனுப்பிவைத்தனர். அங்கு மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News September 9, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்றது. கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 12 நாட்களாக முட்டை விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
News September 8, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து காவலர் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9598168482), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – டேவிட் பாலு ( 9486540373), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .
News September 8, 2025
நாமக்கல்லில் வரும் 10ஆம் தேதி இலவசம்!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 10ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திலேபியா மீன்வளர்ப்பு என்கிற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.