News August 5, 2025
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

முதுகுளத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல் (50) இவர் கடந்த 1ம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு நிவாரணம் பெற கடந்த 3 நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காளான் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து அரசு நிதியை சித்திரவேல் மனைவி சுமதியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
Similar News
News August 6, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் புலனாய்வுத் துறையில் வேலை…

ராமநாதபுரம் மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு (Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்த <
News August 6, 2025
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள், கடந்த மாதம் 13-ம் தேதி எல்லை தாண்டியதாகக் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (06.08.2025) மூன்றாவது முறையாக இலங்கை, ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களின் சிறைக்காவலை ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
News August 6, 2025
ராம்நாடு: EXAM இல்லாமல் GOVT வேலை.. APPLY பண்ணுங்க!

தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <