News October 23, 2025

மின்சாரம் தாக்கியதில் கார் டிரைவர் பலி

image

கோவை கோவில்பாளையம் அடுத்துள்ள கீரணத்தத்தில் வினோ பிரேம் தாஸ் என்பவர் வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நாங்குநேரியை சேர்ந்த தங்கதுரை டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காரை கழுவுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 23, 2025

நான் கெடு விதிக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி!

image

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக ஒன்றிணைய 10 நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பவே, “நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, 10 நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் ஊடகத்தில் தான் தவறாக போட்டுவிட்டனர்” என்று தெரிவித்தார்.

News October 23, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.23) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News October 23, 2025

இருசக்கர வாகனத்தில் இருந்த நல்ல பாம்பு!

image

பொள்ளாச்சி அருகே உள்ள மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் விஷத்தன்மை வாய்ந்த நல்ல பாம்பு ஒன்று இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனே, பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பாம்பு லாபகரமாகப் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!