News July 15, 2024
மினி டைடல் பூங்கா அடுத்த மாதம் திறப்பு

தஞ்சாவூரில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணியை கடந்த ஆண்டு முதல்வர் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் அருகே மேலவஸ்தாசாவடியில் 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி மதிப்பில் தரை மற்றும் 3 தளங்களுடன் 55,000 சதுர அடியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில், மினி டைடல் பூங்கா அடுத்த மாதம் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News August 21, 2025
தஞ்சாவூர்: தமிழ்நாடு காவல்துறையில் வேலை!

தஞ்சாவூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 21, 2025
தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி சோ்க்கை வழிகாட்டும் முகாம்

மாணவா்களுக்கு உயா் கல்வி சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளைக் களைந்து தீா்வு காணும் வகையில், தஞ்சை ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீர் கூட்டரங்கத்தில் நாளை (ஆக.22) காலை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
தஞ்சை: விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி கட்டாயம்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.20) நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.