News October 27, 2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

image

கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவர்/கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நாளை (28.10.25) காலை 10:30 மணிஅளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ள இரண்டாம் தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் 10 நிமிடம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி அளிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News October 28, 2025

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சியில் புதன்கிழமை ( 29.10.2025 ) வார்டு எண் 47 நவலடியான் மண்டபம் சுக்காலியூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 13 துறைகள் 43 சேவைகள் அடங்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மருத்துவ காப்பீடு அட்டை, ரேஷன் கார்டு திருத்தம் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 27, 2025

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கே பேட்டை மற்றும் வதியம் ஆகிய பகுதிகளில் நாளை, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் கே பேட்டை மற்றும் வதியம் பகுதியை சேர்ந்த அனைவரும் தங்களது கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் சமர்ப்பிக்கலாம். இதில் 13 துறைகள் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம் கே பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது.

News October 27, 2025

கரூர்: கோர விபத்தில் தாய் உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில், அஜித் குமார் என்பவர் தனது தாய் ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராணி என்பவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!