News January 23, 2025
மாவட்ட காவல் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News August 5, 2025
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த கட்டிடங்களில் உள்ள தேவாலயங்களை புதுப்பிப்பதற்கு அரசு மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேலான தேவாலயங்களுக்கு ரூ.10 லட்சம், 15 ஆண்டுகள் – ரூ.15 லட்சம் மற்றும் 20 ஆண்டுகள்- ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
சேலம்: தேர்வில்லாமல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் “TN Rights” திட்டத்தின் கீழ் பணிபுரிய உதவியாளர், தட்டச்சர், சீனியர் கணக்காளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கு தேர்வில்லாமல் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 5, 2025
சேலம் மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், “கிரிப்டோ கரன்சி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சிலர் இந்த வழக்கிற்கும், கிரிப்டோ கரன்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தி வருவதாக தெரிகிறது. வழக்கு விசாரணையில் இருப்பதால், பொதுமக்கள் இதுபோன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்” என தெரிவித்துள்ளார். SHARE IT