News July 2, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எம்எஸ்சி அக்ரி நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

Similar News

News September 10, 2025

திருவாரூர்: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 10, 2025

திருவாரூர் காவல் துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு: “GET UNLIMITED INTERNET OFFER FOR ONE YEAR. SEND THE 6 DIGIT CODE TO THIS NUMBER” இது போன்ற குறுஞ்செய்தி மூலம் கேட்கப்படும் OTP எண்களை பகிர வேண்டாம். குற்றவாளிகள் மற்றும் மோசடி இணைய தளம் மூலம் வங்கி கணக்குகளை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே OTP எண்களை பகிர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

News September 10, 2025

திருவாரூர்: விருது பெற்ற ஆசிரியருக்கு அமைச்சர் பாராட்டு

image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் த.சூரியகுமார். இவர் ஆசிரியர் பணியில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றார். இந்த நிலையில், ஆசிரியர் சூரியகுமாரை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

error: Content is protected !!