News January 15, 2026

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொங்கல் விழா

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் ஆகியவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News April 8, 2026

கள்ளக்குறிச்சி: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

சங்கராபுரம்: டீ போட்டு வாக்கு சேகரிப்பு!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம், ச. செல்லம்பட்டு கிராமத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், சங்கராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் தா.உதயசூரியன் ஒரு டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில், கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

News April 8, 2026

கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: மோ.வன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் குமார்(28). இவருக்கும் கலைவாணி(28) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கலைவாணி வேலையில் இருந்து நின்றார். ஆனால், அவருக்கான போனஸ் தொகை ரூ.12,000 பணத்தை நிறுவனம் தராததால் மனமுடைந்த சங்கர் குமார், நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!