News March 29, 2024
மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து புகார் அளிக்க 8925533710 மற்றும் 8925533810 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மேற்கண்ட என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 8, 2026
திண்டிவனத்தில் இளம் பெண் பரிதாப பலி!

திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கொசல்யா (34) என்பவர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரை மீட்டு குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
விழுப்புரம்: மாமியார் அடித்து கொலை.. மருமகன் கைது

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி. இவர், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பாவந்துாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற போது மீனாவிற்கும் மருமகன் சிவாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவா ஆத்திரத்தில் மீனாவைத் தாக்கிய போது அதை தடுக்க சென்ற மாமியார் தனலட்சுமி தலையில், தாக்கிய நிலையில் மயங்கி விழுந்தார். தனலட்சுமி உயிரிழந்த நிலையில் சிவாவை கைது செய்தனர்.
News February 8, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 7) இரவு முதல் இன்று (பிப். 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


