News October 21, 2024
மாவட்ட காவல்துறை சார்பில் மறைந்த காவலர்களுக்கு மரியாதை

காவல் அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாளில் காவலர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி அவர்கள் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அரசு மரியாதை உடன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நியமன உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினார்.
News September 10, 2025
கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி நீக்கம்; எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதற்காக கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மணிகண்டன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
News September 9, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (09.09.2025) இரவு 10 மணி முதல், நாளை புதன்கிழமை (10.09.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் வெளியிடபட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.