News March 28, 2025
மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

தமிழகத்தில் இன்று (மார்ச் 28) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடங்களும், வருகிற 2-ந் தேதி ஆங்கிலமும், 4-ஆம் தேதி விருப்ப மொழி தேர்வும், 7-ஆம் தேதி கணிதம், 11-ஆம் தேதி அறிவியல், 15-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. வேலூரில் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொது தேர்வு தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News April 2, 2025
பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்

பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது பதிவுக்கட்டணம் 1 சதவீதம் கட்டணம் குறைப்பு திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் வேலப்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பத்மபிரியா பெண்களுக்கு பத்திர பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
வேலூர்: கல்வியில் சிறந்து விளங்க

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ளது பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில். சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மேலும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள பெருமாளுக்கு நெய்விளக்கேற்றி, துளசி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும். இந்த செய்தியை குழந்தை வைத்திருப்பவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி.<