News March 12, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி உதவித்தொகை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகை குறித்தான கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
Similar News
News March 12, 2025
உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News March 12, 2025
இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே நேற்று இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த களமருதூர் கிராமத்தை சேர்ந்த ராமர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவியை எம்.எல் ஏ மணிக்கண்ணன், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
News March 12, 2025
Mobile App Developer பணிக்கு இலவச படிப்பு

தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.