News February 20, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கல்லூரியில் தமிழக முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் தரங்கம்பாடி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பணிகள் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாலோசித்தார்.
Similar News
News August 20, 2025
மயிலாடுதுறை: கோழி பண்ணை அமைக்க மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460401>>(பாகம்2)<<>>
News August 20, 2025
மயிலாடுதுறை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (2/2)

▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!
News August 20, 2025
கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ள நிலையில் கொள்ளிடம் ஆற்றில் 50,000 கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கொள்ளிடம் கரையோரம் உள்ள திட்டு பகுதி கிராமங்களான திட்டுப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு, திட்டு அளக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது கால்நடைகளை முன்னெச்சரிக்கையாக மேடான பகுதிக்கு கொண்டு செல்லும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.