News June 25, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி ஆணையர் கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முகமது பைசல், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Similar News
News August 22, 2025
கரூர்: செல்போன் தொலஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம்.<
News August 22, 2025
கரூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

கரூர்: மின் அலுவலகத்திற்கு உட்பட்ட சஞ்சய் நகர் மின்பாதையில் இன்று(ஆக.22) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், திருமால் நகர் ,மருத்துவ நகர் ,அமிர்தாம்பாள் நகர், சஞ்சய் நகர், சாந்தி நகர் ,அர்ச்சனா நகர், அம்மன் சிட்டி, பழனியப்பா நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கரூர்: மனைவி முன்பே கணவர் துடிதுடித்து பலி!

கரூர்: சின்னகோதுரைப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(52). இவர் தனது மனைவி செல்வி(44), மகள் தனுசியா(14) ஆகியோருடன் காரில் கரூரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது க.பரமத்தி அருகே பவுத்திரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி பலியானார். அவரது மனைவி, மகள் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.