News October 9, 2024

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாற்றம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்த வீ.அறிவுடைநம்பி, ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், விழுப்புரம் கோட்டாட்சியராக இருந்த சே.காஜா சாகுல், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை மாற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Similar News

News December 19, 2025

செங்கல்பட்டு: Diploma/ ITI முடித்திருந்தால் 1லட்சம் வரை சம்பளம்

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் இந்த <>லிங்கில் <<>> விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2025

செங்கல்பட்டு: 510 கிலோ கஞ்சா அழிப்பு!

image

ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ கஞ்சா, நீதிமன்ற உத்தரவுப்படி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் ஆலை இயந்திரத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி முன்னிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை ரூ.3 கோடி மதிப்பிலான 2,892 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 19, 2025

செங்கல்பட்டு: வேலை செய்த வீட்டில் பெண் கைவரிசை!

image

தாம்பரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவரது வீட்டில், திருவள்ளூரைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவர் சமையல் வேலைக்குச் சேர்ந்தார். ஒரு மாதத்திலேயே அவர் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். சந்தேகமடைந்த சுகுமார் பீரோவைச் சோதித்தபோது, அதிலிருந்த நகை மற்றும் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!