News August 21, 2024

மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

image

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான கையெழுத்து போட்டி மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் 2ம் பிடித்த வடக்கம்பட்டி கள்ளர் மேல் நிலைப்பள்ளி மாணவி தீத்திகாவை பாராட்டி மதுரை ஆட்சியர் இன்று(ஆக.21) சான்றிதழ் வழங்கினார்.

Similar News

News December 12, 2025

மதுரை: Driving Licence-க்கு முக்கிய Update!

image

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 12, 2025

அழகர் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

image

அழகர்கோவில் கள்ளழகர் கோயில், அதன் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகியற்றில் மார்கழி பிறப்பை முன்னிட்டு டிச.16 முதல் 2026 ஜன.13 வரை நடை திறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு சாத்தப்படும். மதியம் 3:30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

News December 12, 2025

தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை: தமிழக அரசு வாதம்

image

திருப்பரங்குன்றம் வழக்கில், இன்று (டிச.,12) நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது.

error: Content is protected !!