News January 25, 2025
மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு

நாளை ஜன. 25 தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காலை 10.00 மணியளவில் 13-17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், தமிழ் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News September 16, 2025
தூத்துக்குடி: குலசை கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் தெற்கு பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் கரை ஒதுங்கியதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து இறந்தவர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
தூத்துக்குடி: தந்தை கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி 2வது ஊரணி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் ராகுல்காந்தி இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ராகுல்காந்தி தந்தை முனியசாமியின் கழுத்தை பிளேடு மற்றும் கத்தியால் அறுத்து கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News September 16, 2025
தூத்துக்குடி: அடுத்த ஆண்டு குலசையிலிருந்து ராக்கெட்..!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தற்போது மும்முறமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதற்கு 2300 ஏக்கர் நிலம் இஸ்ரோ கையகப்படுத்திள்ளது. மேலும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசையிலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.